போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்-நளின் பண்டார

229 0

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான தண்டனை வழங்குவதாக அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று (16) மாலை பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரிய அளவான நிதி மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய உருவாக்கப்பட்ட விஷேட மேல் நீதிமன்றத்தின் முதற் கட்ட நடவடிக்கைகள் இந்த இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment