மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

251 0

கண்டி – மஹியங்கன பிரதான வீதியின் தெல்தெனிய, வேகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹியங்கனையில் இருந்து தெல்தெனிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தெல்தெனியவில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (17) காலை 7 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்கொட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment