இரண்டு வழக்குகளில் பசிலுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

208 0

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான இரண்டு வழக்குகளில் அவர் வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு வழக்குகளும் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மற்றும் கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 10 திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையான காலத்தில் சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி வழங்குமாறு பசில் ராஜபக்ஷ சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி குறித்த காலப்பகுதியில் அவர் வௌிநாடு செல்வதற்கு அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மற்றும் கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a comment