கைது செய்யப்பட்ட மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

295 0

mahindananda-aluthgamageகைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்து துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மகிந்தாநந்த அலுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான முறைபாடுகள் குறித்து வாக்கு மூலம் வழங்க அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்தார்.

பொரல்ல – கிங்ஸ் வீதியில் அமைந்துள்ள மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு சொத்தமான வீட்டை கொள்வனவு செய்ய 27 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து சந்தேகம் தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட வேளை, அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.