மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை தொடர்பில்

299 0

12086வடமத்திய மாகாணத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உட்பட்ட 31 பேர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த கம்பஹா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் பிரதம நீதியரசரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது குறித்த 31 பேரும் மரணித்தனர்.

இது தொடர்பான வழக்கு பல தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.