சீனாவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பிலான தகவல்களை அடுத்த வாரம் வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் உள்ளடங்கிய ஆவணங்களை ஆதரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

