ஒரே ஆட்சிக் காலத்திற்குள் அதிக கடன் பெற்று இருப்பது தற்போதைய அரசாங்கமே என்று தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார்.
அந்தக் கடனை செலுத்துவதற்காக பொதுமக்களிடம் அதிக வரி அறவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

