அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (14) நாளை மறுதினமும் (15) மின் வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் வெட்டு வடக்கு மாகாணத்தில் அமுலில் இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

