பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

216 0

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 பேர் இராஜங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹிதோகம, தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்கமுவ போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 தங்கச் சங்கிலி, மேலும் சில தங்க நகைகள் மற்றும் நகைகளை அடகு வைத்த பற்றுச்சீட்டு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்னர்.

Leave a comment