பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் பிரெக்சிட் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன். இதற்கான செயல் திட்டங்களை பிரிட்டன் பிரதமர் தெரசா உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஒரு பத்திரிகைக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளை பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையாளும் விதத்தை விமர்சித்தார். பிரிட்டன் பிரதமரின் பிரெக்சிட் செயல்திட்டமானது, அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையை சீர்குலைக்கும் என கூறியுள்ளார்.
தற்போதைய திட்டப்படி அவர்கள் ஒப்பந்தம் செய்தால், நாங்கள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்வோம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.