கட்டண மீற்றர் இன்றி பயணிக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு தண்டம்

201 0

கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

விடயதானத்துக்குப் பொறுப்பான, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென, அந்தச் சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

“அதனடிப்படையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, முச்சக்கர வண்டிகளில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீற்றரில்லாத முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.

அதற்கான பரிந்துரைகளை, முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றரில்லாமல் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது தொடர்பில் ​தேடியறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவே
இந்த நடவடிக்கையைச் செயற்படுத்துமாறு கோரியுள்ளதற்கு இணங்க, மேற்​கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment