விஜயகலாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்-நாமல்

430 0

அரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக முன்னான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமான விடயம் என்பதால் அது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment