பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு-துமிந்த

222 0

கொழும்பின் புறநகர பகுதிகளில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்த வகையில் கல்கிஸை மற்றும் தெஹிவளை பகுதகளில் சேதமடைந்த வீடுகளுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 264 ஆக அதிகரிப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment