விஜயகலாவுக்கு எதிராக தேங்காய் உடைத்த ஒன்றிணைந்த எதிரணி

224 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.

ஒன்றிணைந்த  எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை, மாகாண சபை உறுப்பினர்களென பலர்  கலந்துக்கொண்டு தேங்காய் உடைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

Leave a comment