ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் மறைவாக நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் நேற்று இராஜகிரியவில் வைத்து நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைக்க இலக்கம் 4 அளுத்கடை நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய நேற்று இரவு 8.15 மணியளவில் வெலிகடை பொலிஸாரால் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பின் போது விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட பெண்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் மடபாத, சிலாபம், இராஜகிரிய, பலாங்கொடை மற்றும் மதகம பிரதேசங்களைச் சேர்ந்த 40, 24, 23 மற்றும் 28 வயதுகளையுடைய விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தயாராகவிருந்த நான்கு பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரையும் இன்று இலக்கம் 4 அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.