விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் கைது !

361 0

விசா இன்றில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து கடையொன்றில் பணியாற்றி வந்த இந்திய பிரஜையொருவர் நேற்று மோதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள குறித்த பிரஜை விசா இன்றி நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து கடையொன்றில் பணியாற்றி வந்துள்ள நிலையில் மோதரை பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்மாவத்தை பகுதியிலேயே குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து கடையொன்றில் பணியாற்றி வந்துள்ள நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 22 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நேற்று இலக்கம் 10 அலுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment