திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 06 பேர் கைது

319 0

வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடுதல் மற்றும் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மோட்டார் சைக்கிள்களை திருடுதல் சம்பந்தமாக 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹானை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிட்டகோட்ட, கோட்டே மற்றும் ஹோகந்தர பிரதேசங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் மிரிஹாணை, அத்துருகிரிய, தங்காளை, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தெரிய வந்துள்ளது.

சநந்தேகநபர்கள் 18, 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ள நிலையில் மிரிஹானை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a comment