ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும், இன்னொருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.