விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேலியகொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

