ரயில் பெட்டிகளை, ஆசனங்களை சேதப்படுத்தினால் சிறை!

311 0

ரயில் சேவையினை நடத்துவதற்காக பில்லியன் கணக்கில் அரசாங்கம் செலவிடுவதாகத் தெரிவிக்கும், சிவில்  விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ரயில் சேவையின் பயனை அனுபவிக்கும் பொதுமக்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ரயில் பெட்டிகள் மற்றும் ஆசனங்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் சிவில் உடையில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ரயில் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் பயணிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக பொது சொத்தினை சேதப்படுத்தியமை, தொடர்பிலான சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சேதமடைந்த 200 ரயில் பெட்டிகளை புதுப்பித்து மீண்டும் ரயில்களில் இணைத்துக்கொள்ளும் நோக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இதுவரை 25 பெட்டிகள் அவ்வாறு புதுப்பிக்கப்பட்டு ரயில்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment