மாத்தறையில் கொள்ளையிடப்பட்ட ஒரு தொகுதி நகை மீட்பு

197 0

மாத்தறை நகை கடையில் அண்மையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹபரகட வசந்தவின் தாயிடம் நடத்திய விசாரணைகளின் பின் மாத்தறையில் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது.

இந்த நகை நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment