54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்ட மூவருக்கு சிறை

208 0

சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல  திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட  மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்  காலி நீதிமன்றம் இன்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு காலி பிரதான நீதவான், ஏ.நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,  இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி,  சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு  இவர்கள் அழைத்துச் செல்லவிருந்த நிலையில், காலி தெற்கு கடற்படை  முகாம்  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

Leave a comment