இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி!

290 0

ஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர் தாக்கப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன்  ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம், சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் முதல் போட்டி நடைபெறும் நாள் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கவுதமன், பாரதிராஜா, வெற்றிமாறன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் கவுதமன், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

Leave a comment