நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் உண்மையில்லை – அஜித் நிவாட் காப்ரால்

225 0

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

பாரிய கடன் சுமையை நாட்டின் மீது சுமத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு பெற்றுக் கொண்டதாகவும், இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்டுரையில் கடந்த அரசாங்கத்துக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அஜித் நிவாட் காப்ரால், அரசாங்கத்தை ஒப்படைக்கும் போதிருந்த 07 ட்ரில்லியன் ரூபா கடன் தற்போது 11.05 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்தால் அதற்குரிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய வங்கியில் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment