தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (28) பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் செய்து தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது சபாநாயகரைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.