தமிழ் நாட்டு மீனவர்கள் தடுக்கப்பட்டனர்

340 0

fishermen_334இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த 3000க்கும் அதிகமான தமிழ் நாட்டு மீனவர்கள், தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கச்சத்தீவு எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்கு அவர்கள் பிரவேசிக்க முற்பட்ட போது, கடற்படையினரால் தடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி கோரி கடந்த வாரங்களில் தமிழக மீனவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.

பின்னர் அவர்களின் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.