பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் பின்னர் நம்பிக்கை

317 0

000006ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையானது, யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான மக்கள் மத்தியில் சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் பான் கீ மூன் இலங்கைக்கான விஜய்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த விஜயத்தை அடுத்து, நீண்டகாலமாக நீதியை எதிர்பார்த்துள்ள மக்கள் மத்தியில் சிறிய அளவான நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச தரப்புக்களும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெறுமனே வரவேற்பதையும் தாண்டி, நீதிகிடைக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.