தேரரின் ஹிட்லர் ஆட்சி குறித்த கருத்து தவறு, வீதியில் இறங்க தயார்- குமார வெல்கம

212 0

இந்த நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் ஒருவர் தேவை என முக்கிய மகாநாயக்க தேர்களில் ஒருவர் கூறிய கருத்தை தெளிவாகவே மறுக்கின்றோம் என மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஹிட்லர் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவாராக இருந்தால் அதற்கு எதிராக தனது உயிரைக் கொடுத்தாவது போராட தயாராகவுள்ளோம். இதற்காக கட்சியிலிருந்தும் வெளியேற தயங்க மாட்டோம்.

எமக்கு இந்நாட்டை ஆட்சி செய்ய ஜனநாயகத் தலைவர் ஒருவரே தேவையாகும். இராணுவத்துக்கும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் குமார வெல்கம மேலும் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இக்கருத்துக் குறித்து இவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment