விசேட மேல் நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் நியமனம்

161 0

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்ப ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகளே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்க உள்ள இந்த விசேட மேல் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.

Leave a comment