வெள்ளை விரிப்பில் வரவேற்கப்பட்ட ஞானசார தேரர்

238 0

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தேரர், நீதிமன்ற வளாகத்திலிருந்து வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டு மலர் தூவி பொதுபல சேனா தேரர்களினாலும் அவ்வமைப்பின் ஆதரவாளர்களினாலும்  அழைத்துச் செல்லப்பட்டார்.

ஹோமாகம நீதிமன்றத்தில் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தேரர் இன்று பிணையில் விடுதலையானால் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment