ரமித் ரம்புக்வெல்லவிற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

292 0

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவனயீனமான முறையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த மூன்று மாத காலமாக இரத்து செய்யப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி அரச சேவைகள் ஆணையகத்திற்கு அருகில் கார் ஒன்றை செலுத்தி விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாரஹேன்பிட்ட பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment