நீர்கொழும்பில் கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

288 0

கடலுக்கு குளிக்கச் சென்ற 05 மாணவர்களுள் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நீர்கொழும்பு, எட்டுக்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போயுள்ள இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள மாணவர்களை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment