வீட்டில் தனிமையில் இருந்தவர் கொலை

277 0

வெல்லவாய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல, வெஹரயாய பிரதேசத்தில் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹந்தபானாகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய கரவிட வெதகே ஜகத் புஷ்பகுமார என்பவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் இருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்கான காரணமோ சந்தேகநபரோ இதுவரை இனங்காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment