1000 ரூபா இலஞ்சம் பெற்ற சமூர்த்தி அதிகாரி கைது

460 0

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொலோன்ன பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூர்த்தி பயனாளி ஒருவரால் கொலோன்ன சமூர்த்தி பிரஜா வங்கியில் விண்ணப்பிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கடன் தொகையை பெற்றுக் கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறி சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியால் 2000 ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

அதில் 1000 ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

சந்தேகநபரான சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரி எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a comment