ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணிகள் மேன்முறையீடு

4015 0

ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றை  ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் இன்று (15) தாக்கல் செய்துள்ளனர்.

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் (14) அவருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்திருந்தது.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் மீதான விசாரணையின் பின்னரான தண்டனையே இவ்வாறு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment