பிரதி அமைச்சர் நலின் பண்டார இன்று FCID யில் வாக்கு மூலம்

46694 0

முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு என்பவற்றுக்கான பிரதியமைச்சர் நலின் பண்டார வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்வதற்கான இன்று(15)காலை 10.30 மணியளவில்  நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் இரண்டு கப்பல்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக நலின் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் படி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சுமார் ஒன்றரை மணித்தியாலம் அங்கு வாக்குமூலம் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment