ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி)

430 0

u-nஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது.
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹ_சேன், இலங்கை குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்திருந்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தமது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலும், அதற்கு இலங்கை பதிலளித்துள் சூழலிலும் இது தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் செய்ட் அல் ஹ_சேன் இன்று குறிப்பிடவில்லை.
இன்றைய உரையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹ_சேன் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இலங்கை தொடர்பில் ஹ_சேன் எதனையும் சுட்டிக்காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.