முல்லை வன்னிவிளாங்குளத்தில் விபத்து-தாய் பலி, மகன் படுகாயம்(படங்கள்)

413 0

 

body-1முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இரண்;டு பிள்ளைகளின் தாயான அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் என்ற பெண் ஸ்தலத்திலேயே பலியானார்

body-2
அவருடன் பயணித்த அவரது மகனான 14 வயதுடைய இரவிக்குமார் கீதன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
சம்பவத்தின்போது, முல்லைத்தீவு மாந்தைகிழக்கு துணுக்காய் வீதி வன்னி விளாங்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன், உயிரிழந்த பெண் செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இரண்டுபிள்ளைகளின் தாயான குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன், 14 வயதுடைய அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

body-3

body-4

body-5

body-7