இலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் மஹியங்கன பகுதியில் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணமற்போயுள்ளார்.
இதனால் இன்று (13) இப்போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு காணமற்போன சைக்கிள் ஓட்ட வீரரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டி, ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.