துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு இலக்காகிய கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி டம்மிந்த தேரரை மேலதிக சிகிச்சைக்காக இன்று (13) ஹம்பாந்தோட்டை அரச வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளார்.
தேரருடைய உடல் நிலை சாதாரணமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது நேற்றிரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.