கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு

211 0

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது இனந்தெரியாத மூவர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (12) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தேரர் ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரருடன் காணப்பட்ட சோபித எனும் தேரரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதே விகாரைக்கு அருகில் வைத்து இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த மூவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பின்னர் இவர்கள் விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment