முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது- ஹரின்

207 0

இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர்.

உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ,பிரித்தானியா போன்ற நாடுகளில் முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே நடைமுறையில் உள்ளது. அங்கு யாரும் தமது கருத்தை வெளிப்படுத்தலாம். எவரையும் தூற்றலாம். அதனையே நாமும் இங்கு நடைமுறை செய்கின்றோம் எனவும் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment