காவிரி விவகாரம் – சட்டத்தை மதிக்காதவர்கள் இருப்பு கரங்கொண்டு அடக்கப்படுவர்

464 0

sheetharamaiya-120515-380-seithy-indiaகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றும் சித்தாராமையா குறிப்பிட்டுள்ளார்.

இன்று காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சித்தராமையா இந்த தகவல்களை வெளியிட்டார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

எனினும் உயர்நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதித்து நடக்கும் என்றும் கர்நாடகா முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் 15 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு  இடைக்கால உத்தரவாகும்.

எனவே அதன் சாதக பாதகங்களை மேல்முறையீட்டில் எடுத்துரைக்கப்போவதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

பிற மாநிலத்திலிருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கும், கர்நாடகாவின் தங்கியிருப்போருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் சித்தாராமையா உறுதியளித்துள்ளார்.