சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது

373 0

e0ae85e0aea9e0aeb2e0af8d-e0aeaee0aebfe0aea9e0af8d-e0ae89e0aeb1e0af8de0aeaae0aea4e0af8de0aea4e0aebf-e1458982272241சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவளத்துறை அமைச்சு இது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் அனுசரணையில் இந்த மின்னுற்பத்தில் நிலையம் சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருந்தது.

இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணைக்கு வந்த போது, சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியது.

இந்த மனுவின் பிரதிவாதியாக இலங்கை மின்சார சபை உள்ளிட்ட மேலும் சில அரச நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.