போராட்டங்கள் ஓய்வு

382 0

karnataka-protestதமிழ் நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் சற்று ஓய்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பெங்களுர் மற்றும் மைசூர் நகரங்களில் இந்த போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு பல இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் புதிதாக வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வைத்து 65க்கும் அதிகமான பேருந்துகளும், பல பாரவூர்திகளும் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டிலும் கன்னடர்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.