பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10) அதிகாலை வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR -669 ஆம் இலக்க விமானத்தில் பிரதமர் தலைமையிலான குழு வெளிநாடு சென்றுள்ளது. பிரதமருடன் ஐந்து போர் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிரதமரின் பயணம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க வில்லையென விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன