கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர் கைது!

227 0

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

22 வயதுடைய அசேல ரணசிங்க என்பவரே ஊரகஸ்மங்சந்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment