காத்தான்குடி – டீன் வீதி – அலியார் சந்திக்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , காத்தான்கடி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.