ரிஷாதின் கட்சியில் நவவியின் இடத்துக்கு முஹம்மட் இஸ்மாஈல்

220 0

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி இராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட இடைவெளிக்கு  சீனி முஹம்மது முஹம்மது இஸ்மாஈல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனின் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மொஹமட் நவவி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

கட்சியிலுள்ள வேறு ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த இடத்துக்கே அ.இ.ம.காங்கிரஸின் சார்பில் சீனி முஹம்மத் முஹம்மத் இஸ்மாஈல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரின் பெயரை நேற்று (06) வர்த்தமானியில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்துவரும் நாட்களில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment