தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நுழைவாயில்

211 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட கௌனியகம இடையில், பெல்பொல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலை ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு பில்லியன் ரூபா செலவில் இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மில்லெனியே தொழிற்துறை வலயத்திற்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் இந்த நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியஆராய்ச்சி நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதேவேளை, தொம்பே – எஸ்வத்த பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தினையும் ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment